திருக்கருகாவூர் தலத்தில், அருள்மிகு முல்லைவனநாதருடன் அருள் பாலிக்கும் கருணையின் வடிவான கர்ப்பரட்சாம்பிகை அம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மக்கட்பேறு வழங்குபவள். இந்த புனித தலத்தின் வரலாறு பற்றி அறிய http://www.garbaratchambigaitemple.org/ இணையதளத்திற்கு செல்லவும்.
கர்ப்பரட்சாம்பிகை தாயாரின் ஆசியுடன் சமீபத்தில் எனக்கு சுக பிரசவம் உண்டாகி ஆரோக்கியமான குழந்தை பிறந்தது. அன்னையின் மகிமையை முழுதாக நம்பி அவளை தினம்தோறும் போற்றி பூஜிக்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவள்.
இந்தியாவில் வசிக்காவிட்டாலும் அன்பர்கள் தமது பெயர், நட்சத்திரம் விபரத்துடன் காசோலையும் அனுப்பினால், மாதம் தோறும் அர்ச்சனை செய்து குங்குமம், விபூதி பிரசாதம் அவர்களது வீடு தேடி அனுப்பி வைப்பார்கள். மந்திரம் ஜெபித்த விளக்கெண்ணை பிரசாதத்தை பிரசவ வலி வரும் சமயம் கர்ப்பிணி பெண்கள் தம் வயிற்றில் தடவினால் அம்மனின் அருளால் பிரசவம் சுலபமாக அமையும்.
அணுக வேண்டிய முகவரி:
Executive Officer,
Arulmigu Mullaivananatha Swamy Temple,
Thirukkarugavur - 614 302.
Papanasam Tk.
Thanjavur Dt.
Tamilnadu State, India.
Phone: 04374-273423.
கீழ் கண்ட ஸ்லோகத்தை பக்தி ச்ரத்தையுடன் படிப்பவர்களுக்கு சுகப் பிரசவம் உண்டாகும் என்பதை என் அனுபவத்தால் கண்டுக் கொண்டேன்:
ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே ஸீரதா நாம யக்ஷிணீ தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீ பவேது
%% UPDATED SLOGAMஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூல
சம்போ சுகப்ரசவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீ மாத்ரு ஸிவ பாலயமாம் நமஸ்தே